05/01/2026
ரத்து செய்..!
ரத்து செய்..!
*திடக்கழிவு மேலாண்மையில் (குப்பையை அகற்றுவதில்) முற்றிலுமாக செயலிழந்துள்ள*
*SWMS நிறுவனத்தின்* *ஒப்பந்தத்தை*
*ரத்து செய்..!*
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செய்ய கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்கிற SWMS நிறுவனத்திற்கு 60 வார்டுகளையும் திடக்கழிவுகளை அதாவது வீட்டில் சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்க்காக இந்நிறுவனத்தை திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக, அதாவது 28 மாதங்களாக தரம் பிரிப்பதற்காக ஒரு இம்மி அளவு கூட முயற்சி செய்யாத காரணத்தினால், வீட்டில் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் பாரக் குழிகளில் கொட்டியது,
அப்போது பாறைக்குழி சுற்றி உள்ள பொது மக்கள், உதாரணத்துக்கு பொங்குபாளையம் பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போதே திருப்பூர் மாநகராட்சி சுதாகரித்துக் இருக்கவேண்டும். இந்த SWMS நிறுவனத்தை அழைத்து “தரம் பிரிக்காமல் பாறைக்குழிகளில் கொட்டுவது” Solid Waste Management SWM 2016 யின் படி தவறு என்றும்
மேலும் தங்கள் SWMS நிறுவனத்துக்கு தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கு தான் ஒப்பந்தம் செய்து உள்ளோம் என்றும், தவறும் பட்சத்தில் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவோம் என்று கூறியிருக்கவேண்டும்.
அதை செய்யாத காரணத்தினால், இந்த நிறுவனம், குப்பைகளை
முதலிபாபாளையத்தில் உள்ள பாரக்குளியில் கொட்டத் துவங்கியது. உடனே முதலி பாளையத்தில் இருக்கும் மக்கள் போராட்டத்தை தொடங்கியவுடன் அங்கு இருந்து
நெருப்பெரிச்சல்
இச்சிப்பட்டி
சின்ன காளிபாளையம்
இடுவாய் போன்ற
எங்கெங்கெல்லாம் பாரக்குழிகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் கொண்டு சென்று குப்பைகளை கொட்டியது. ஒவ்வொரு இடத்திலும் போராட்டங்கள்.
ஒரு கட்டத்தில் எங்கு குப்பை கொட்ட சென்றாலும், அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக திருப்பூர் மாநகராட்சியில் காணும் இடமெல்லாம் குப்பைகள் மழை போல் குவியத்துவங்கின.
முன்பு ஒரு காலத்தில் திருப்பூர் பகுதி முழுவதும்
வேலைக்கு ஆட்கள் வேண்டும்
என்று பதாகையில், தென்பட்ட இடத்தில் எல்லாம் தற்போது
இங்கு குப்பை கொட்டாதீர்கள்
என்று பதாகைகள், பேனர்கள் தான் தென்படத்துவங்கின.
இப்படி கடந்த இரண்டரை வருடங்களாக குப்பைகள் தரம் பிரிப்பது தொடர்பாக எந்த ஒரு சட்டத்தையும் பூர்த்தி செய்யாமல் வெறுமனே மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாத மாதம் 5 கோடி முதல் 8 கோடி , 9 கோடி என மாநகராட்சியில் இருந்து குப்பை மேலாண்மை என்கிற பெயரில் பணத்தை பெற்றுக் கொண்டிருந்து விட்டு.
பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் நிறைந்து இருக்கும் டாலர் சிட்டி என்று பெயர் எடுத்த, திருப்பூர் மாநகராட்சியை தமிழ் நாடு மட்டும் இல்லாமல், இந்திய அளவில் திடக்கழிவு மேலாண்மையில் மோசமான நகரமாக சித்தரிக்க முழு முதற் காரணமான
இந்த SWMS நிறுவனத்தின் ஒப்பந்தத்தை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்..,
இந்த மாநகராட்சி நிர்வாகம்
கடந்த
*இரண்டரை வருட காலமாக*
அதாவது சுமார்
*28 மாதங்களாக*
*தரம் பிரிக்காமல்* *பாரக்குலையில்* குப்பைகளை கொட்டிக் கொண்டிருந்த
இந்த *ஸ்ரீனிவாச வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ்* நிறுவனத்தின்
*ஒப்பந்தத்தை* இதுவரை
*ஏன் ரத்து* செய்யவில்லை
ஏன் இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு முட்டு கொடுக்க வேண்டும்...,?
|| திருப்பூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம் | | | | |