09/01/2021
பசுஞ்சாண மூலிகை தூபம்
இயற்கையின் வழியில் இறைவனை உணருங்கள் ...
தயாரிப்பு முறை
பாரம்பரிய இந்திய நாட்டு பசு இனத்திலிருந்து சாணமானது உத்தராயன புண்ய காலத்தில் மட்டுமே சேகரிக்கப்டும், சூரிய சந்திர ஸ்புடம் செய்து பக்குவப்படுத்தியது.
வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள் ஆகும். நறுமணத்திற்காக சர்வதேச தரச்சான்று பெற்ற குங்கிலியம் மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது.
தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகைகள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது.
மூலப்பொருள்கள்
பசுஞ்சாணம், குங்கிலியம், பஞ்ச கவ்யம், 108 யக்ஞ திரவியங்கள், வெட்டி வேர், துளசி, தும்பை, ஏலக்காய், வெண்கடுகு, கரும்புச்சாறு, பனைவெல்லம், பச்சை கற்பூரம்.
கீழ்கண்ட நவகிரக மூலிகைகள் சேர்க்கப்பட்டது.
வெண்கடுகு - சூரியன் | நீரடி முத்து - சந்திரன் | சீந்தில் கொடி - செவ்வாய்
பற்பாடகம் - புதன் | குரு வேர் - குரு | தக்கோலம் - சுக்கிரன்
கோரை கிழங்கு - சனி | வாவிடங்கம் - கேது | கோஷ்டம் - ராகு
பயன்படுத்தும் முறை
சூரிய உதயத்தின் போது ஈசானிய மூலையிலும், சந்திரோதய நேரத்தில் கன்னி மூலையிலும் ஏற்றுவது சிறப்பு.
10 வினாடிகள் வரை நன்றாக எரியும் படி பற்ற வைக்கவும்.
காற்றோட்டமுள்ள அறையில் ஏற்றி வைக்கவும்.
ஒரு மணி நேரம் வரை எரியக்கூடியது.
பயன்கள்
வீடு மற்றும் ஆலயத்தில் இருக்கின்ற பஞ்ச பூத சக்தியினை ஜீவ சக்தியாக மாற்றி லட்சுமி அருளை ஏற்படுத்தும்.
சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது.
மாட்டு சாணமானது கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, காற்றில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தபடுத்த கூடியது.
பசுஞ்சாணம் மற்றும் தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது.
பூவராகம் தூபத்தினை வீடு மற்றும் ஆலயத்தில் ஏற்றினால் தன வசியம், லட்சுமி கடாட்சம் வந்து தங்கும். பில்லி சூனியத்தை கட்டுப்படுத்தி தெய்வத்தை தங்க வைக்கும். யாகம் வளர்ப்பதால் உண்டாகும் தெய்வீக நிலையை உணரலாம்.
உடல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கரித்தூள் மற்றும் இரசாயன வாசனை திரவியம் சேர்க்காதது !!