Rama Naatu Marunthu Kadai

Rama Naatu Marunthu Kadai Organic Products

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை  #பொங்கல்_மிக்ஸ்: #வரகு_பயன்கள்:* சர்க்கரை அளவை குறைக்கிறது.* மூட்டுவலியை கு...
18/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:

#வரகு_பயன்கள்:

* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

#முருங்கை_இலை_பயன்கள்:

* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.

* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.

* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.

* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

சித்தர் பாடல் :உசிலை மரம் :அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதிலோதியடை...
27/06/2023

சித்தர் பாடல் :
உசிலை மரம் :
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்
கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதி
லோதியடை வானினமென்று ஒன்று குழலேகலிகை
யாதி யாடபிசின்கட் டை .

🔷அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.
🔷இந்தப் பொடி கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாகச் செயல்பட்டு, பொடுகுத் தொல்லையைத் தடுத்து, முடியை கருமையாக்கி, முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
பயன்பாடு:
🔷இந்த பொடியை தண்ணீரில் கலந்து, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
🔷இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது.
🔷தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது.
🔷தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது.
🔷பச்சை பொடிகளில் வைட்டமின்கள் A, E மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன.

க்ரீன் டீ(GREEN TEA) ☕️:🔹க்ரீன் டீ (GREEN TEA) பரவலாக அனைவரும் அறிந்த ஒரு பானமாகும்.🔹இது சூடாக அல்லது குளிர்ச்சியாக எப்ப...
08/05/2023

க்ரீன் டீ(GREEN TEA) ☕️:
🔹க்ரீன் டீ (GREEN TEA) பரவலாக அனைவரும் அறிந்த ஒரு பானமாகும்.
🔹இது சூடாக அல்லது குளிர்ச்சியாக எப்படி வேண்டுமானாலும் அருந்த கூடிய பானமாக உள்ளது.
🔹க்ரீன் டீ உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
🔹ஹெல்த்லைன் (Healthline)என்ற தளம் க்ரீன் டீ குறித்து கூறும்போது பூமியில் உள்ள சிறந்த ஆரோக்கியமான பானம் க்ரீன் டீ என கூறியது.
🔹ஏனெனில் இது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளன.
🔹சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக தேநீர் குடிப்பது மூலம் கோடை காலத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள முடியும்.
For orders: https://dharaniherbbals.in/produ.../premium--green-tea-75-gm

 #உளுந்தங்கஞ்சி_நன்மைகள்முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.தோல் சுருங்காதுகண்களுக்கு ஆரோக்கியம்எலும்புகள் தேயாதுப...
06/05/2023

#உளுந்தங்கஞ்சி_நன்மைகள்
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
தோல் சுருங்காது
கண்களுக்கு ஆரோக்கியம்
எலும்புகள் தேயாது
பெண்களின் கர்ப்பப்பை வலுபெறும்.

|
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.சுவாச கோளாறு...
25/04/2023

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.

செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்

உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

"முயற்சி" - ஒவ்வொருவரும் ஒரு சிறிய முயற்சியினை வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் ,அதன் முடிவில் வெற்றியோ தோல்...
17/04/2023

"முயற்சி" - ஒவ்வொருவரும் ஒரு சிறிய முயற்சியினை வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் ,அதன் முடிவில் வெற்றியோ தோல்வியோ நிச்சயம் கிடைக்கும் ,வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி தான் , ஆனால் தோல்வியை தழுவினால் மனம் தளரவிடாமல் முயற்சியை வேறு விதமாக எடுக்க வேண்டும் கண்டிப்பாக முயற்சிக்கான பலன் கிடைக்கும்.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்  #ஆவாரம்பூ_டீ-  #பயன்கள்: #மலச்சிக்கல்:மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம்....
13/04/2023

இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:

#மலச்சிக்கல்:

மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.

#சருமத்_தொற்றுகளுக்கு:

நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.

#சிறுநீர்த்தொற்று:

ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.

காய்ச்சலுக்கு:

அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.

#நீரிழிவு_நோய்:

இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.

#வயிற்றுப்புண் குணமாக:

காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.

For order: www.dharaniherbbals.in

   இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது ....ஆனால் அந்த பக்கத்தை இந்...
01/04/2023


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது ....
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.....
-டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம்.

| | See less

     கோடைகாலத்தை நெருங்கி வரும் நாம் சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, குளிர்ச்சியான...
27/03/2023


கோடைகாலத்தை நெருங்கி வரும் நாம் சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
குறிப்பாக, குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றுடன் சில பழ வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். இவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவும்.
| | | | |

ரோஜா சோப்பு :ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக்...
15/03/2023

ரோஜா சோப்பு :
ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

இந்த சோப்புகள் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது மற்றும் தோலின் வயதானதை மெதுவாக்கும்.

இது வறண்ட மற்றும் வயதான சருமத்திற்கும் சிகிச்சையளிக்கிறது.

இது நிறமி, சிவத்தல் மற்றும் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் அனைத்து வகையான தோல் நிறங்களுக்கும் நல்லது.… See more

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் ...
11/03/2023

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

 #சிவப்புசந்தானம்- பயன்கள்முகத்தில் கரும்புள்ளிகள்.முக சுருக்கம்உடல் சுருக்கம்.தழும்புகள் நீங்கி சுத்தமாகவும் பொலிவுடன் ...
23/02/2023

#சிவப்புசந்தானம்- பயன்கள்
முகத்தில் கரும்புள்ளிகள்.
முக சுருக்கம்
உடல் சுருக்கம்.
தழும்புகள் நீங்கி சுத்தமாகவும் பொலிவுடன் வைத்துக்கொள்ள பயன்படுகிறது மேலும் இது சருமத்திற்க்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது.
| |

Address

Pollachi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rama Naatu Marunthu Kadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share