Vision Student Care

Vision Student Care Student welfare

*மென்-புத்தகம் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள் ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்த புத்தக குழு.**மின் இதழ் தவிர வேறு...
25/12/2019

*மென்-புத்தகம் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள் ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்த புத்தக குழு.*

*மின் இதழ் தவிர வேறு எந்த தகவலும் பதிவு செய்யக்கூடாது. மீறினால் உடனடியாக புத்தக குழுவில் இருந்து நீக்கப்படுவர்கள்.*

*Forward message கூடாது*
*புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்* *இனையவும்*

*எல்லா துறை மின் புத்தங்களை அனுப்பி வைக்கலாம். வார, மாத இதழ் பழைய புத்தகங்கள்* *அனுப்பலாம்*
*Admin :-
G. THAMILSELVAN*

Group link :-

WhatsApp Messenger: More than 1 billion people in over 180 countries use WhatsApp to stay in touch with friends and family, anytime and anywhere. WhatsApp is free and offers simple, secure, reliable messaging and calling, available on phones all over the world.

11/06/2016

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகம்

1.History Of Modern India – Bipan Chandra. (History)
2.India’s Struggle For Independence – Bipan Chandra. (History)
3.Facets of Indian Culture – Spectrum. (Culture)
4.Geography of India – Majid Husain. (Geography)
5.Oxford School Atlas – Oxford. (Geography)
6.Certificate Physical and HumanGeography – Goh Cheng Leong.
(Geography)
7.Indian Polity for Civil Services Examinations – M. Laxmikanth.
(Polity)
8.Indian Economy – Ramesh Singh. (Economy)9.Economic Survey
(2014--15). (Economy)
10.Science and Technology in India – TMH. (Science and
Technology)
11.Environmental Studies from Crisis to Cure 2nd Edition –
R.Rajagoplan. (Environment)
12.India Year Book(Current Affairs)
13.Manorama Yearbook. (Current Affairs)
14.CSAT 2015 : Paper – 2 Manual by TMHorCSAT-II – Arihant
(CSAT – Paper 2)
15.Analytical Reasoning – M. K. Pandey (CSAT – Paper 2 :
Analytical Reasoning)
16.Verbal & Non-Verbal Reasoning – R. S.Aggarwal (CSAT Paper
2 : Reasoning)

ரெயில்வே பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு; தெற்கு ரெயில்வே அறிவிப்புதெற்கு ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளுக்கு 2016–17–ம் ஆண...
22/05/2016

ரெயில்வே பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளுக்கு 2016–17–ம் ஆண்டிற்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ‘பிட்டர்’, ‘வெல்டர்’, ‘கார்பெண்டர்’, ‘பெயிண்டர்’, ‘மோட்டார் மெக்கானிக்’, ‘வயர் மேன்’, ‘கேபிள் ஜாயிண்டர்’, ‘எலக்டிரீசியன்’, ‘டீசல் மெக்கானிக்’, ‘பிரிட்ஜ்–ஏசி மெக்கானிக்’ உள்பட பல்வேறு ரெயில்வே பணிகளுக்காக 862 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

15 முதல் 24 வயது உடையவர்கள் இந்த பணிகளில் சேர தகுதியுடையவர்கள். தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மெட்ரிக் மற்றும் ஐ.டி.ஐ. படித்த விருப்பமுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். www.sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் இதுதொடர்பான முழு விவரங்களையும் பெறலாம். உரிய விண்ணப்பத்தினை ‘டவுன்லோடு’ செய்து கொள்ளலாம். தொழிலாளர் விதிமுறைகள் பின்பற்றி நடத்தப்படும் இந்த தேர்வுகளில், கல்வி தகுதியை கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.100 கட்டணமாக (எஸ்.சி/எஸ்.டி. மற்றும் பெண்கள் தவிர) சேர்த்து ‘வொர்க்ஷாப் பர்சனல் ஆபிசர், காரேஜ்–வாகன் வொர்க்ஸ், பெரம்பூர், சதர்ன் ரெயில்வே, சென்னை–600023’, என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது

Southern Railway, in its present form, came into existence on 14th April 1951 through the merger of the three state railways namely Madras and Southern Mahratta Railway, the South Indian Railway and the Mysore State Railway. Southern Railway’s present network extends over a large area of India’s Sou...

வேலை வேண்டுமா?- அரசு காப்பீட்டு நிறுவன அதிகாரி ஆகலாம்யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், நேஷனல் இன்சூ...
03/05/2016

வேலை வேண்டுமா?- அரசு காப்பீட்டு நிறுவன அதிகாரி ஆகலாம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய 4 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை. எல்.ஐ.சி. நிறுவனம் ஆயுள் காப்பீட்டு சேவையை வழங்குவதைப் போல இந்த 4 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் வாகனங்கள், பொருள்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த காப்பீட்டு சேவைகளை வழங்கி வருகின்றன.

என்ன தகுதி?

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமானது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நேரடி நியமனம் மூலம் நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியில் 300 காலியிடங்களை நிரப்ப முடிவுசெய்துள்ளது. இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வை எதிர்கொள்ள

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நிர்வாக அதிகாரி பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஆன்லைன் வழியிலான அப்ஜெக்டிவ் தேர்வும், கேள்விக்கு விரிவாகப் பதிலளிக்கும் வகையிலும் (Descriptive type) வினாக்கள் கேட்கப்படும். நிர்வாக அதிகாரி பணிக்குத் தொடக்க நிலையில், சம்பளம் ரூ.48 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். முதல் கட்டத் தேர்வான ஆன்லைன் தேர்வு ஜூன் 12-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கு மே 6 முதல் ஆன்லைனில் (www.uiic.co.in) விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 17 ஆகும்.

நேரடியாக நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் சேருபவர்கள் உதவி நிர்வாக மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர், கோட்ட மேலாளர் (மண்டல மேலாளர்), பொது மேலாளர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம். மேலும் நிறுவனத்தின் தலைமை பதவியான தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியையும் அடையலாம்.

Buy online motor insurance,health insurance online,online travel policy,quick insurrance renewal,top public sector insurance,government general insurance company,recruitment

நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..அடப்பாவிகளா!! வணிகம் என்னும் பெயரில் சட்டரீதியாகவே நம்மை விற்றுவிட்ட நமது அரசுகளி...
16/02/2016

நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..

அடப்பாவிகளா!! வணிகம் என்னும் பெயரில் சட்டரீதியாகவே நம்மை விற்றுவிட்ட நமது அரசுகளின் ஏமாற்று என்பதா? மனச்சாட்சியில்லாத வணிகர்களின் லாபவெறிக்கு இந்தியர்களைப் பலியிடுகிறார்கள் இந்தியத் தலைவர்கள் என்பதா ..
என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை!

அரசாங்கம் இதைத் தடுக்கவேண்டும் என, சில சட்டதிட்டங்களைப் போட்டிருந்தாலும், அதை இந்தியர்களில் 99.999%பேர் அறிந்துகொள்ளாத படியே நமது அரசுகளின் நடைமுறை லட்சணம் உள்ளது!

மாதிரிக்கு
இந்தியாவில் விற்கப்படும் பற்பசையில் உள்ள கோடுகளைப் படத்தில் தந்திருக்கிறேன்,

இதோ அந்த விவரம் -

இயற்கை முறையில் தயாரித்தது – பச்சைக்கோடு,
இயற்கை 75% செயற்கை 25% - நீலக்கோடு,
செயற்கை 75% இயற்கை 25% - சிவப்புக்கோடு
கிட்டத்தட்ட முழுவதுமே செயற்கை – கருப்புக்கோடு
பிஸ்கட், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் இவ்வாறே இருப்பது இன்னும் கொடுமையான செய்தி!

இதை நாம்தான் கண்டுபிடித்து, தவிர்க்க வேண்டும்.

“செயற்கையான ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட, ஆபத்து நிறைந்த உணவுப்பொருள் இது“ என்பதையே கருப்புக்கோடு காட்டுகிறதாம்!
ரசாயனப் பொருளும், செயற்கை மருத்துவப் பொருளும் கலந்தது என்று அடையாளம்தான் சிவப்புக் கோடு செப்புகிறதாம்!
மருத்துவப் பொருளும், இயற்கையான பொருள்களும் கலந்தது நீலக்கோடு!
பச்சைக் கோடு ஒன்றுதான் இது இயற்கையானவற்றால் தயாரித்த பொருள் என்று நமக்குப் பச்சைக் கொடி காட்டுகிறதாம்!

இவ்வளவு அர்த்தம் சொல்வதற்காகவே கோடுகளில் வண்ணவேறுபாடு குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்னும் செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்? படித்தவர்களையே ஏமாற்றும் இந்த விளையாட்டு, படிக்காத எத்தனை ஏழை இந்தியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் என்பதை நினைத்தால் நம்மை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் தலைவர்களை-
“அடக் கொலைகாரப் பாவிகளா!” என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?

ஒரு பின்குறிப்பு-
சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கருப்புக்கோடு உள்ள உணவுப் பொருள்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.
எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் மக்கள் வாங்கித்தின்று மருத்துவமும் இல்லாமல் வயிறுவீங்கி சாகட்டும் இந்தியநாய்கள் என்றுதான் நம் அரசு நினைக்கிறதா?

நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பர்களே!

அடுத்து,
முடிந்தவரை இந்தச் செய்தியைப் பகிருங்கள்.
முதலில் நம் குழந்தைகளுக்கு இதைச் சொல்லுங்கள்,
பொருள்களை வாங்கும்போது கவனித்து வாங்குங்கள்,
இப்போதைக்கு நம்மால் செய்யக் கூடியது இதுவே.
இதை மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் விற்பனை செய்வது அறியாத மக்களுக்குச் செய்யும் அநியாயம் என்று வழக்குப் போடலாமா என்றும் முயற்சி செய்யவேண்டும்.

ரௌத்திரம் பழகுவோம்

உங்களால் முடிந்தால் இதில் எத்தனை பூட்டுக்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கண்டுபிடியுங்கள்.....
16/02/2016

உங்களால் முடிந்தால் இதில் எத்தனை பூட்டுக்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கண்டுபிடியுங்கள்.....

இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்:-இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்கள...
14/02/2016

இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்:-

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல் பிரிவில் - 200 பேர். கலைப் பிரிவில் - 134 பேர். இந்தியக் குடியுரிமை பெற்ற, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

* அறிவியல் பிரிவு பணிக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.

* கலைப் பிரிவு பணிக்கு, இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள்

HQ Trg Zone,
Fort Saint George,
Chennai- 600009 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகப்பில் “APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 15.5.2015 - See more at: http://m.dinakaran.com/detail.asp?Nid=144206 .pPTvs6KE.dpuf

Can become havildhar in Indian army,Dinakaran provides latest breaking news in tamil and india, tamilnadu, world, crime, chennai, business, sports, district and more etc.

12/02/2016

யார நேசிச்சாலும் உண்மையா நேசிங்க
பொய்யா மட்டும் நேசிக்காதிங்க..!
உங்க இதயம் போல தான்,
உங்கள நம்பி வந்த இதயமும்..!

27/05/2015

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: பிஎஸ்என்எல் காலியிடங்கள்: 400 வயதுவரம்பு: வெளிப்பிரிவிற்கு 30க்குள் இருக்க வேண்டும். உட்பிரிவிற்கு 50க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினியில், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும். சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 24,900 - 50,500 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூபாய் 750. விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015 இதுபோன்ற மேலும் பல ஐடி துறை வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/இணையதளத்தினைப் பார்வையிடுங்க.

டி.என்.பி.எல்லில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் பணிகள் – உடனே விண்ணப்பிங்கசென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ...
27/05/2015

டி.என்.பி.எல்லில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் பணிகள் – உடனே விண்ணப்பிங்க

சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள 18 மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம்

பதவியின் பெயர்: மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி மொத்தப் பணியிடங்கள்: 18 விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2015 கல்வித்தகுதி: எம்.பி.ஏ பட்டப்படிப்பில் முதல் தர மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 25 - ஓபிசி, 27 - எம்பிசி, 30 - எஸ்.சி/எஸ்.டி சம்பள விகிதம்: தொடக்கத்தில் ரூ.18,000- 2ம் வருடம் ரூபாய் 20,250 மேலும் விவரங்களுக்கு - www.tnpl.com இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.

27/10/2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: DLL/LHA/2014/1

பணி: Light House Attendant

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 23.10.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரீசியன்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், ரேடியோ மற்றும் டெலிவிசன் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணியிடங்கள்: தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா.

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட பரிசீலனை, எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Directorate of Lighthouses and Lightships, "Deep Bhavan", 5/20, Jaffer Syrang Street, Chennai-600001.

Address

Teacher's Colony
Tirunelveli
627007

Telephone

+919597968515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision Student Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision Student Care:

Share