05/09/2024
அடடே.. அதிசயத்திலும், அதிசயமா நெத்து கிண்டில்ல போட்ட "வா.. வா.. கருப்பா" வோட அடுத்த அத்தியாயம் அதுக்குள்ளே லைவ்க்கு வந்துடுச்சுப்பா.. படிச்சுப் பாருங்க..
அப்பறம் ரொம்ப நாளா என்னோட ஆதங்கத்தை கொட்டணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. அது என்னனா.. இந்த கதைகள்ல குடிக்கற மாதிரி, சிகரெட் பிடிக்கற மாதிரியெல்லாம் எப்படித் தான் எழுதறாங்களோ? அதையெல்லாம் ஏன் நார்மலைஸ் செய்யறாங்கன்னே தெரியல.. அது என்ன அவ்வளவு முக்கியமான மேனரிசம்னும் தெரியல.. ச்சே.. வில்லனா இருக்கறதுக்கான தகுதி குடி, சிகரெட்னு இருந்தது போய்.. இப்போ ஹீரோவே அதெல்லாம் பண்ணினா தான் அவனை ஹீரோன்னு சொல்லறாங்க..
சரி.. கதைல இருந்து ஒரு குட்டி பிட்டு..
போதையில் தள்ளாடியபடியே, கீழே விழப்போன லுங்கியை சட்டெனக் கைகளில் பற்றிக் கொண்டு மீண்டும் அதை இறுக்கிக் கட்டியபடி அந்தக் கோவிலை நோக்கிச் சென்றான் அவன்.
கோவிலின் பூட்டப்பட்ட அந்த அரைப்பனைமர உயர கதவை அண்ணாந்து பார்த்தவன், சட்டை பாக்கெட்டில் இருந்த அந்தச் சிறிய பாட்டிலை எடுத்துத் தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டு..
"ஏன் கருப்பு? உனக்குத் தான் இந்த ஊருக்குள்ள யாரு குடிச்சாலும் ஆகாதாமே? நான் உன் கோவில் வாசல்ல.. உனக்கு முன்னாடியே நின்னு குடிக்கறேன்.. இன்னும் என்னை ஏன் நீ விட்டு வச்சிருக்க?
அதுவுமில்லாம.. நேத்து ராத்திரி நான் உன் கோவிலுக்குப் பின்னாடியே தான் தூங்கிட்டு இருந்தேன்.. அந்தக் காவாலிப் பயலுங்களை எல்லாம் தன்னந்தனியா, ஒத்தை ஆளா அடிச்சு துவைச்சிருக்கியே.. என்னையும் எழுப்பியிருந்தா நானும் உனக்கு உதவ வந்திருப்பேன்ல?" என்று கேலியாகக் கூறி சத்தமாகச் சிரித்தான்.
அவன் சிரிப்பொலி அந்தப் பிரதேசத்தில் எதிரொலித்து முடிகையில், தூரத்திலிருந்து ஒரு குதிரை கனைக்கும் சத்தம் அந்தப் பிரதேசத்தையே அதிரச் செய்தது!
அந்த அதிர்வில் தன்னையும் அறியாது இவனுடலும் சிலிர்க்க.. ஒரு கணம் இறுகிய முகத்துடன், அந்தக் கனைப்புச் சத்தம் வந்த திசையையே அவன் உறுத்து நோக்கினான்.
அவன் பார்வைக்கு ஆஞ்சியோ என்னவோ, அதிசயத் தக்க விதமாக அந்தக் குதிரையின் சத்தமோ நொடியில் அடங்கியது!
முகம் மீண்டும் பழையபடி இலகுவாக அந்தக் கதவைத் திரும்பிப் பார்த்தவன்..
"என்ன கருப்பு? பயமுறுத்திப் பார்க்கறியா?
நான் யாருன்னு தெரியுமில்ல? காலன்.. கரிகாலன்!" என்று கூறி இடி இடியென நகைத்தான் அவன்.
லிங்க் இங்க.. https://whatsapp.com/channel/0029VaF8St30wajuVDOLJz22